தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தை அடுத்த இரண்டாம்புலிகாடு கிராமத்தை சேர்ந்த முஹம்மது ஜஸீம் என்ற 1 மாத ஆண் குழந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.
அக்குழந்தையை சென்னை மெட்ராஸ் மெடிகல் மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து சென்ற நிலையில், இதய அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வருகிற 26ம் தேதி ஒரு அறுவை சிகிச்சையும், மூன்று மாதம் கழித்து ஒரு அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இக்குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு தங்களால் இயன்ற நிதியுதவியை செய்து 1 மாத குழந்தையின் உயிர் காக்க உதவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு மனிதரை வாழவைத்தவர், எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் !
வங்கிக்கணக்கு விபரம் :