பட்டுக்கோட்டை லாரல் மேல்நிலைப்பள்ளியில் மனோரா ரோட்டரி சங்கத்தின் சார்பில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று செவ்வாய்கிழமை காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் லாரல் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் மற்றும் பள்ளி இயக்குனர்கள், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பட்டுகோட்டை மனோரா ரோட்டரி சங்கத்தின் தலைவர், நிர்வாகிகள், உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டது.
பள்ளி வளாகம் மற்றும் பள்ளி அமைந்துள்ள பகுதியில் உள்ள கிராமங்களில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டது.