சென்னையில் நேற்று இரவு பெய்ய தொடங்கிய கனமழை விடிய விடிய கொட்டித்தீர்த்தது. சென்னையில் இரவு மட்டும் 10.4செ.மீ மழை பதிவாகியுள்ளது.
ஒரே இரவில் கொட்டித்தீர்த்த கனமழையால் மாநகர் முழுவதும் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் காலை அலுவலகத்திற்கு செல்வோர் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.
இந்த கனமழை காரணமாக மண்ணடியில் ஐயப்ப செட்டி தெருவில் வசிக்கும் ஜெரினா பானு என்பவரின் வீட்டு சுவர் அதிகாலை 4 மணியளவில் இடிந்து விழுந்தது. இதில் 45 வயது ஜெரினா பானு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சபவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒரு நாள் பெய்த மழைக்கே சென்னை மாநகர் முழுதும் மழைநீர் தேங்கி ஆங்காங்கே குளம்போல் காட்சியளித்தது. குறிப்பாக பெசன்ட் நகர் மற்றும் திருவல்லிக்கேணி பகுதிகளில் மழைநீர் சாலைகளில் தேங்கியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.