மதுக்கூர் மின் பகிர்மான வட்டத்திலிருந்து அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை உள்ளடக்கிய பகுதிகளுக்கு மதுக்கூர் துனை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையத்தின் மின் மாற்றிகளின் பராமரிப்பிற்காக மாதம் ஒருமுறை மின்தடை செய்யப்பட்டு பணிகள் நடைபெறும்.
அதன்ப்டி நாளை (17-7-2019) புதன்கிழமை அன்று காலை 9மணி முதல் மாலை 6 மணிவரை அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின்வாரிய பொறியாளர் தெரிவித்துள்ளார்.
எனவே மின் சார்ந்த அத்தியாவசிய தேவைகளை மக்கள் முன்கூட்டியே முடித்து கொள்ள ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ வேண்டிக் கொள்கிறது.