Thursday, March 28, 2024

அதிரையில் +1 மற்றும்+2 மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா !

Share post:

Date:

- Advertisement -

அதிரை அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியரின் படிப்பிற்காக அரசால் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில்
இவ்வாண்டு +1 மற்றும் +2 மாணக்கர்களுக்கு கணினி துரிதமாக வழங்கிட மாணவர்கள்
அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட அரசு தமிழகத்தில்
உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உயர் நிலை வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்களை கணக்கெடுத்து, அவர்களுக்கு மடிக்கணினி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டன. அதன் பேரில் தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவியருக்கு கடந்த சில நாட்களாக மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் +1,+2 மாணவர்களுக்கு லெனோவா நிறுவனத்தின் மடிக்கணினி வழங்கப்பட்டன. அதனை
பெற்றுக்கொண்ட மாணவர்கள் உற்சாகம்
பொங்க தங்களின் வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.

கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கும் 3 மாதம் கழித்து மடிக்கணினிகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...