Friday, March 29, 2024

தமிழக அரசின் தலைமைச் செயலராக சண்முகம் ஐஏஎஸ் பதவியேற்பு !

Share post:

Date:

- Advertisement -

தமிழக அரசின் தலைமை செயலாளராக பதவி வகித்த கிரிஜா வைத்தியநாதன் இன்றுடன் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு அதிகாரிகள் பிரிவு உபாசார விழா நடத்தி வழி அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து புதிய தலைமை செயலாளராக நிதித்துறை செயலாளர் சண்முகத்தை ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது. ஆனால் ஆளுநர் மாளிகையோ ராஜகோபால் ஐ.ஏ.எஸ்.-ஐ தலைமை செயலாளராக நியமிக்க தீவிரம்காட்டியது.

இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு காட்டியது. இதனால் புதிய தலைமை செயலாளர் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் நிதித்துறை செயலாளர் சண்முகத்தையே தலைமை செயலாளராக நியமித்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம், 1985-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியாவார்.

2010-ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்த போது நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார் சண்முகம். கடந்த 9 ஆண்டுகாலம் நிதித்துறை செயலாளராக இருந்த சண்முகம் தற்போது தலைமைச் செயலாளராகி உள்ளார்.

இன்று பிற்பகல் தலைமை செயலகத்தில் தலைமை செயலாளராக சண்முகம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...