தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மல்லி மைந்தர்கள் குழுவின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
இன்று(20.6.2019) முகமது ஆசிப் மற்றும் சினோபர் பாத்திமா இருவருக்கும் இடையே திருமணம் என்னும் நிக்காஹ் மல்லிப்பட்டிணம் ஜூம்ஆ பள்ளியில் நடைபெற்றது. திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு மா, பலா, கொய்யா, உள்ளிட்ட பல மரக்கன்றுகளை, பசுமையை வலியுறுத்தும் வண்ணமாக மரக்கன்றுகள் மல்லி மைந்தர்கள் குழுமத்தின் சார்பாக அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இந்த மரக்கன்றுகள் வழங்குவதன் மூலம் மரம்வளர்ப்பும்,அதன் தேவையை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியது போல் இருந்தது.