பேரழிவுக்கு எதிரான பேரியக்கம் மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை மனித சங்கிலி போராட்டம் நடக்கவிருந்த நிலையில், பாதுக்காப்பு காரணங்களை காட்டி காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய போராட்ட குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது இதில் வருகின்ற 23 ஆம் தேதி இப்போராட்டம் நடத்த காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதுகுறித்து நாம் மனிதர் கட்சியின் நிறுவன தலைவர் தவ்ஃபீக் எமக்கு அளித்த நேர்காணலில் வருகின்ற 23ஆம் திகதி நடக்கவிருக்கும் போராட்டத்தில் நாம் மனிதர் கட்சி முழுமையான முறையில் பங்காற்றி பேரழிவு திட்டங்களுக்கு சாவு மணிஅடிக்க உறுதி ஏற்றுள்ளது என்றார்.