அதிரையில் பிளாஸ்டிக் பைகளுக்கான தடை உத்தரவை மீறி தொடர்ந்து வியாபாரிகள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வருகின்றனர். பேரூராட்சி அதிகாரிகளும் தொடர்ச்சியாக அதிரையில் உள்ள கடைகளில் தொடர்ந்து ஆய்வு நடத்தி அபராதம் விதித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று திங்கட்கிழமையும் அதிரையில் உள்ள அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு குறித்து பேரூராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பெருமளவில் பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டன.
கிட்டத்தட்ட 17 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டன. மேலும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியதற்காக ரூ. 8,300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் பொதுமக்களும், வியாபாரிகளும் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே சுற்றுசூழலைக் காக்க முடியும்.