Friday, April 19, 2024

பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் கோப்பையை கைப்பற்றிய மும்பை அணி !!(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12-வது சீசனின் இறுதிப்போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெற்றது. இதில் ஐபிஎல்-ன் பரம வைரிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதினர்.

இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணிக்கு துவக்க ஆட்டகாரர்களாக ரோஹித்- டி காக் ஜோடி களமிறங்கியது. அதிரடியாக ஆடிய டி காக் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் அந்த அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்து வந்தன.

இறுதியில் 20 ஓவர் முடியில் மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய அந்த அணியின் போலார்டு 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் குவித்தார். சென்னை பந்துவீச்சில் தீபக் சஹார் 3 விக்கெட்டுகளும், தாஹிர் மற்றும் தாக்கூர் ஆகியோர் தலா 32 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு வாட்சன்-டு பிளஸ்சிஸ் ஜோடி துவக்கம் தந்தது. எந்த ஒரு வீரரும் முறையாக ஆடவில்லை. எல்லாம் வருவதும் நடையை கட்டுவதுமாக இருந்தனர். வாட்சன் மட்டும் இறுதி வரை போராடி 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் தாக்கூர், மலிங்கா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் பரபரப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 1 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் 4-வது முறையாக சாம்பியன் ஆகி கோப்பையை கைப்பற்றியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...