Friday, April 19, 2024

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்திய அணி..!!(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -


இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3-1 என முன்னிலை வகிக்க இன்று 5வது ஒருநாள் போட்டி நாக்பூரில் நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கத்தில் நன்றாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி , பின்னர் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ரன் குவிக்க திணறியது. இறுதியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்தது. 

பின்னர் ஆடிய இந்திய அணிக்கு ரோஹித்-ரஹானே ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. நன்றாக விளையாடிய ரோஹித் சர்மா சதமடித்து வெற்றிக்கு வழிவகுத்தார். ரஹானேவும் தன் பங்கிற்கு 61 ரன் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 42.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள்  தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி ICC ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தையும் பிடித்தது.


 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...