Friday, April 19, 2024

அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள்.. இலங்கையில் உச்சகட்ட பரபரப்பு.. அவசர நிலை பிரகடனம் !

Share post:

Date:

- Advertisement -

இலங்கையில் தொடர்ந்து குண்டு வெடித்து வருவதால் தற்போது பெரிய அளவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் அங்கு தற்போது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் அடுத்தடுத்து தொடர்ந்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்து வருகிறது. இன்று காலை 3 தேவாலயங்களில் கொழும்பில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது. அதன்பின் மூன்று ஹோட்டல்களில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது.

கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு சர்ச், மட்டக்களப்பு சர்ச் ஆகிய இடங்களில் குண்டுவெடித்தது. அதன்பின் சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்கிரி லா ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல்களில் குண்டுவெடித்து இருக்கிறது.

அதன்பின் 6 மணி நேர இடைவெளியில் தெய்வாலா மிருகக்காட்சி சாலைக்கு எதிராக இருக்கும் ஹோட்டலில் புதிய குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் இரண்டு பேர் பலியானார்கள். அதன்பின் டிமாட்டகொடா பகுதியிலும் இன்னும் ஒரு குண்டு வெடித்துள்ளது.

இதனால் தற்போது இலங்கையில் உச்ச கட்ட பரபரப்பு நிலவி வருகிறது. இதனால் அங்கு தற்போது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தொடர் குண்டுவெடிப்பால் கொழும்பில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

அசம்பாவிதங்களை தவிர்க்க, மாலை 4 மணி முதல் சமூக வலைதளங்களை முடக்கி இருக்கிறார்கள். அதேபோல் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள ராணுவத்தை வடக்கு பகுதிக்கு செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அங்கு ராணுவம் குவிக்கப்பட்டு வருவதால் மக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...