அதிரை எக்ஸ்பிரஸ் ஆரம்பித்து 12ஆண்டுகளை கடந்து 13 வது ஆண்டின் அடியெடுத்து வைத்துள்ளது.
உள்ளதை உள்ளப்படி சத்தியத்தை சளைக்காமல் சொல்வதில் அதிரை எக்ஸ்பிரஸ் எப்பொழுதும் தயங்கியது இல்லை.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிராம்பட்டினம் தேர்வுநிலை பேரூராட்சியில் அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் என கூறிக்கொண்டு அங்குள்ள அதிகாரிகளிடம் வம்பிழுத்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளன.
குறிப்பாக அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர்கள் மக்கள் பிரச்சனைகளை கையாளும் போது நெறிகளுக்குட்பட்டு தான் கையாள அவர்களுக்கு பயிற்று விக்கப்பட்டுள்ளன குறிப்பாக அரசுத்துறை சார்ந்த பிரச்சினைகளை மூத்தவர்கள் ஆலோசனைகள் பிரகாரம் தான் குழுமத்தில் நன்கு விவாதிக்கப்பட்டு செயலாக்கம் படுத்தப்படும்.
ஆனால் இன்று பேரூராட்சியில் வம்பிழுத்த ஆசாமி யார் என்றே தெரியாத நிலையில், அவர் அதிரை எக்ஸ்பிரஸ் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான வார்த்தை பிரயோகம் செய்து இருப்பதாக எங்களால் நம்பப்படுகிறது.
எனவே அவரின் அடையாளம் தெரியும் பட்சத்தில் அவர் மீதான சட்ட நடவடிக்கைகள் எடுக்க நிர்வாகம் தயாராகவே உள்ளன.
எனவே பேரூராட்சி நிர்வாகம் இந்த விடயத்தில் ஒத்துழைப்பை நல்க வேண்டுகிறோம்.
இப்படிக்கு,
அக்லன் கலிஃபா
ஒருங்கிணைப்பாளர்