Friday, April 19, 2024

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து… அதிரை உள்ளிட்ட ஊர்களில் பல மணிநேரமாக மின் தடை…!

Share post:

Date:

- Advertisement -

மதுக்கூர் வாடியக்காடு பகுதியில் 110 KV கொண்ட துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மதுக்கூர், துவரங்குறிச்சி, அதிராம்பட்டினம் உள்ளிட்ட ஊர்கள் மின்சாரம் பெறுகின்றன.

இந்நிலையில் இன்று(15/04/2019) இரவு 8 மணியளவில் திடீரென துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வேகமாக பரவிய தீ கொழுந்துவிட்டு எரிவதால், அதனை அணைக்க தீயணைப்பு படையினர் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

இதனால் இத்துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெரும் மதுக்கூர், துவரங்குறிச்சி, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 மணி நேரத்திற்கும் மேலாக மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், மீண்டும் மின் விநியோகம் எப்போது வழங்கப்படும் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை.

ஆனால் இந்த மின்தடையை பயன்படுத்தி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...