தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் சத்யா டிரைவிங் ஸ்கூல் மீது காவல்நிலையத்தில் பயிற்சி பள்ளி மாணவர்கள் புகார்.
ஓட்டுனர் பயிற்சி மற்றும் உரிமம் போன்றவை முறையாக எடுத்து தருவதில்லை என்றும்,காலதாமதமும்,இழுத்தடிப்பு வேலையும் செய்து வருவதாக தினேஷ் அதிரை எக்ஸ்பிரஸ் நிருபரிடம் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது இன்று வா,நாளை வா என்று தொடர்ந்து பல மாதங்களாக காலதாமதம் செய்தும்,அலட்சியம் காட்டி வருவதாக குற்றஞ்சாட்டினர்.சத்யா டிரைவிங் ஸ்கூல் நிறுவனத்தில் தொடர்ந்து சரியான பதில் இல்லாத காரணத்தால் காவல்துறையினரிடம் புகார் அளித்து தீர்வு கிடைக்கும் என்ற ரீதியில் புகார் அளித்ததாகவும் என்று தெரிவித்தனர்.பாதிக்கப்பட்ட அத்தனை பேரும் புகார் அளித்தனர்.