திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு குறித்து இரண்டு கட்சிகளும் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் அண்ணா அறிவாலயத்திற்கு இன்று காலை தொல்.திருமாவளவன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வருகை தந்தனர். அங்கு திமுக சார்பில் தொகுதி பங்கீடு குழுவைச் சேர்ந்த துரைமுருகன், டிஆர் பாலு, எ.வ.வேலு உள்ளிட்டோருடன், திருமாவளவன் மற்றும் விசிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் இந்த ஆலோசனையின் போது உடன் இருந்தார்.
அப்போது திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. சிதம்பரம் தொகுதி தவிர விழுப்புரம் அல்லது திருவள்ளூர் ஆகியவற்றில் ஒன்று ஒத்துக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அநேகமாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இரு இடங்களிலும் அக்கட்சி உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிடும் என அரசியை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.