Friday, April 19, 2024

கஜா புயலால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு தென்னை மரங்கள் வழங்கும் நிகழ்ச்சி !

Share post:

Date:

- Advertisement -

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் சூறையாடியது. இதனால் பல இடங்களில் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. புயலால் தென்னை விவசாயிகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று பட்டுக்கோட்டை வாசுகி திருமண மண்டபத்தில் கஜா புயலின் போது தென்னை மரங்களை இழந்த விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

பாரத் பெட்ரோலியம், சிவகாசி முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி, KSR கல்லூரியின் 2002-2004ஆம் ஆண்டு ஐடி துறையைச் சார்ந்த மாணவர்கள் ஆகியோருடன் இணைந்து பட்டுக்கோட்டை இந்திரா காந்தி யூத் ஃபவுண்டேஷன் சார்பில் இந்த தென்னை மரங்கள் வழங்கப்பட்டன.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய கமிட்டி உறுப்பினர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்னை விவசாயிகளுக்கும் புயலால் தென்னை மரங்களை இழந்தவர்களுக்கும் தென்னை மரங்கள் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...