Thursday, March 28, 2024

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது ~ உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

Share post:

Date:

- Advertisement -

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் தங்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகவும், அதனால் ஆலையை மூட வேண்டும் என்றும் கடந்த ஆண்டு பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைத்து மூடுவதாக அரசாணை வெளியிட்டது.

தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைத்து உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை, ரத்து செய்து தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி, தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது.

அதில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்து, தமிழக அரசின் உத்தரவு செல்லுபடியாகும் என்று கூறப்பட்டது. இதனால் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக அரசு அந்த ஆலையை நிரந்தரமாக மூட சொல்லி அரசாணை பிறப்பித்தது செல்லுபடியாகும். தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை அரசியலமைப்பின் நீதிமன்றங்களில் மட்டுமே விசாரிக்க முடியும். எனவே உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் போன்றவற்றில் மட்டும்தான் இது தொடர்பாக விசாரணை நடத்த முடியுமே தவிர, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அரசுக்கு எதிரான உத்தரவை விசாரிக்க முடியாது. எனவே தமிழக அரசு அல்லது, வேதாந்தா குழுமம் இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றத்தைதான், அணுக வேண்டும். இவ்வாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...