Thursday, March 28, 2024

பிறந்து ஒரு மாதமே ஆன சிசு.. கடும் குளிரில் சாலையில் வீசி சென்ற கொடூரர்கள் !

Share post:

Date:

- Advertisement -

பிறந்து ஒரு மாதமே ஆன அழகான பெண் குழந்தையை கடும் குளிரில் வீசிச் சென்ற கொடூரத்தில் ஒசூர் நகர மக்கள் உறைந்துள்ளனர்.

எப்பவுமே ஓசூர் உழவர் சந்தை மக்கள் நடமாட்டம் உள்ள இடமாகும். விவசாயிகள் விளைபொருட்களை விடிகாலையிலேயே இங்கு கொண்டு வர ஆரம்பித்து விடுவார்கள். அப்படித்தான் இன்று காலையும் சந்தைக்கு வந்தார்கள்.

அப்போது சந்தை அருகில் திடீரென குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது. இதனால் அவர்கள் சுற்றுமுற்றும் தேடி பார்த்தபோது, பிறந்த ஒருமாதமே ஆன பெண்குழந்தை இருப்பதை என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இப்போது தமிழகம் முழுவதும் குளிர் வாட்டி வந்தாலும், ஓசூரில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. ஆனால் விடிகாலை நேரத்தில் இந்த பச்சிளம் குழந்தையை வெறும் துணியால் சுற்றி யாரோ வீசி எறிந்து சென்றதை அறிந்து விவசாயிகள் உட்பட அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அனைவருமே கலங்கி விட்டார்கள்.

உடனடியாக இது குறித்து ஓசூர் நகர போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், ஓசூர் அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் மையத்தில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஓசூர் உழவர் சந்தையில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் குழந்தையை போட்டு சென்றவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

எத்தனையோ பேருக்கு பிள்ளை பாக்கியம் இல்லாதபோது, இப்படி தமிழகத்தில் குழந்தைகளை ரோட்டோரம் வீசி செல்லும் அவலம் அதிகரித்தே வருவது மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...