தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் அதிகளவில் வெறிபிடித்த தெரு நாய்கள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர்.
அதிரையில் பல்வேறு பகுதிகளில் நோயுற்ற தெரு நாய்கள் சுற்றித் திரிவது அதிகமாகியுள்ளது.
இந்நிலையில், நாய்கள் மூலம் பல்வேறு வகையான நோய்கள் காற்றின் வழியே பரவுவது ஒருபக்கம் இருக்க மற்றொரு பக்கம் நாய்கள் பொதுமக்களை கடிப்பது மற்றும் குழந்தைகளை தெருவில் துரத்துவது போன்ற அச்சுறுத்தக்கூடிய செயல்களும் அரங்கேறி வருகின்றன.
இதனால் பொதுமக்கள் தங்களின் பிள்ளைகளை உடலுக்கு ஆரோக்கியம் ஏற்படுத்தக்கூடிய விளையாட்டுக்கு கூட அனுப்ப அச்சப்படுகின்றனர்.
எனவே பொதுமக்களின் சுகாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் விடுத்து வரும் வெறி நாய்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.