Thursday, March 28, 2024

கஜாவுடன் பலபரீட்சை நடத்திய அதிரை எக்ஸ்பிரஸ்..!!

Share post:

Date:

- Advertisement -

 

பிறரைபோல் எங்களுக்கும் அன்றையதினம் பேரதிர்ச்சி தான்… நம்பிக்கை இழக்கவில்லை. ஏனெனில் பத்திரிகை துறையை கரம் பிடித்து பயணிக்கும் இளைஞர்கள் அதிரை எக்ஸ்பிரஸில் உள்ளனர். சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தோம். உள்ளூரில் இருக்கும் அ.எ. நிருபர்களும் வெளியூர் வெளிநாடுகளில் இருக்கும் அ.எ. நிருபர்களும் ஒருங்கிணைந்து பயணமானம். ஆம், அதிரை எக்ஸ்பிரஸின் அவசியத்தை கஜா உணர்த்திய தருணம் அது.

உள்ளூரில் தொடர்பு இல்லை. சில ஜியோ மொபைல்கள் மட்டும் பயன்பாட்டில் இருந்தன. அதனூடே எங்களின் சேவை மையம் செயல்பட தொடங்கியது. வெளிநாட்டில் இருக்கும் அதிரையர்களுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நிலை குறித்து அறிந்து தகவல்களை அளித்தனர் அ.எ. நிருபர்கள். மறுபுறம் மீட்பு, நிவாரண பணிகளையும் இறைவன் அருளால் ஒருங்கிணைத்தோம். இவைகளுக்கு மத்தியில் பலரின் அழுகுரல்களுக்கு ஆறுதல் அளித்தது நம் நிருபர்களின் ஓய்வற்ற உழைப்பு.

தனிநபர் தாண்டி ஒரு குழுவாக பயணிக்கும்போது அதன் தாக்கம் எவ்வாறு உள்ளது? உண்மையில் அந்த குழுவினால் இந்த மனித சமூகத்திற்கு பயனுள்ளதா? என்பதை அறிவது அவசியம். அதனை அதிரை எக்ஸ்பிரஸும் உணர்ந்து இருக்கிறது. ஆதலால் “கஜா சமயத்தில் அ.எ செயல்பாடு” குறித்து மக்களிடம் கருத்துக்கேட்டோம்.

வழக்கம்போல் ஒரு கூட்டம் குறைகளை கண்டறிந்து சொல்லும், அதனை திருத்திக்கொண்டு இன்னும் வீரியமாக செயல்படலாம் என்பது தான் மன ஓட்டம். ஆனால் நிகழ்ந்தது வேறு… 361 பேரில் 95% பயனடைந்ததாக வாக்களித்தனர். 5% பயனடையவில்லை… எதிர்கருத்து(?) பதிவும் தென்படவில்லை. மகிழ்ச்சி…

– அதிரை எக்ஸ்பிரஸ் ஆசிரியர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...