Friday, April 19, 2024

அதிரை அருகே ம.ஜ.க. நிர்வாகிகள் மீது கொலைவெறி தாக்குதல்..!! காவல் துறை அலட்சியம்..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் மழைவேனிற்காடு என்ற பகுதியில் கடந்த 09.12.2018 அன்று சேக்தாவூத் என்பவரின் வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த தகவல் அறிந்து அதிரையை சேர்ந்த S.M. அப்துல் சமது (ம.ஜ. க. நகர செயலாளர்) அவர்களும், அவர்களுடைய சகநிர்வாகிகளும் வாகனத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.

கடந்த 11.12.2018 அன்று மதுக்கூரிலிருந்து நிவாரணப்பொருட்கள் ஏற்றி வந்த நிலையில் விபத்துக்குள்ளான வாகன உரிமையாளர் ம.ஜ.க. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு அழைத்துள்ளார். பிறகு இருவரும் சம்பவ இடத்தில் சந்தித்த நிலையில் வாகனம் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே அருகில் இருந்த நபர்களிடம் விசாரித்தனர். விசாரித்த நிலையில் அந்த மக்கள் இவர்களை ஆபாசமாக திட்டி கட்டை, அரிவாள், கம்பி போன்ற ஆயுதங்களை கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். பிறகு காயமடைந்த ம.ஜ.க. நிர்வாகிகள் அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி 11.12.2018 அன்று அதிரை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த நிலையில் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட ம.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...