Friday, April 19, 2024

அதிரை,மல்லிப்பட்டிணத்தை புறக்கணிக்கும் அதிகாரிகள் கவனத்தில் கொள்வாரா மாவட்ட ஆட்சியர்..!

Share post:

Date:

- Advertisement -

கடந்த மாதம் 16ம் தேதி அதிகாலையில் தமிழக டெல்டா மாவட்டங்களை கஜா என்னும் புயல் புரட்டிப்போட்டு விட்டுச் சென்றது. இன்னமும் கூட மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அப்படியிருக்கையில் அரசு நிவராண பொருட்கள் அறிவிப்பானை வெளியிட்டு 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை.

மேலும் அதிரை மற்றும் மல்லிப்பட்டிணம் பகுதிகளில் இடைக்கால நிவாரணம், குடியிருப்பு சீரமைப்பு,படகுகளுக்கு இழப்பீடு,விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் ஏதும் வழங்கிடாமல் அரசு அதிகாரிகள் மெத்தனப்போக்கை காட்டி வருகின்றனர்.

அதேப்போல் மல்லிப்பட்டிணம்,அதிராம்பட்டினம் பகுதிகளில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.மற்ற பெரும்பாலான பகுதியை பார்வையிடாமல் அதிகாரிகள் புறக்கணித்து சென்றுவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.மேலும் தன்னார்வ அமைப்புகளும்,இஸ்லாமிய அமைப்புகள் மட்டும் தான் தொடர்ந்து நிவாரண பொருட்கள் போன்றவை வழங்கி வருவதாகவும் கூறினர்.

ஆகவே தஞ்சை மாவட்ட ஆட்சியர் இதனை கருத்தில் கொண்டு அரசு அறிவித்த நிவாரண பொருட்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று அப்பகுதி மக்களின் கோரிக்கையாகவும் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...