தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் இன்று இரவு 8.30 மணியளவில் கஜா புயல் தொடர்பாக கீழ்க்கண்டவாறு அறிவிப்பு செய்யப்படுகிறது.
புயலின் காரணமாக காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக
1. குடிசைகள், ஆஸ்பெட்டாஸ் மற்றும் ஓட்டு வீடுகளில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக மேடான மற்றும் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வேண்டும். எனவே கிராமத்தில் உள்ள மக்கள் புயல் பாதுகாப்பு மையத்திற்கு வந்து பாதுகாப்பாக தங்கி கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களை பாதுகாக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
2. கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்க தேவையான ஏற்பாடுகள் புயல் பாதுகாப்பு மையத்தில் செய்யப்பட்டுள்ளது. எனவே அதனை பயன்படுத்தி கால்நடைகளின் உயிரிழப்பை தவிற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
3. மீன்பிடி சாதனங்கள் , கட்டுமரம், படகுகள் ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
4. குழந்தைகள், முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் பல்நோக்கு பாதுகாப்பான மையத்தில் உடன் வந்து தங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
5.மரங்களுக்கு கீழே அமர்வதற்கு தவிர்க்க வேண்டும்.
6.மின்சாதன பொருட்களை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.
மேற்கண்ட தகவல்களை மாவட்ட நிர்வாகம் சார்பாக அனைத்து கிராம மக்கள் அணைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது.
இப்படிக்கு,
மாவட்ட நிர்வாகம், தஞ்சாவூர்.