தமிழகத்தை மிரட்டி வரும் கஜா புயலானது இரவு நாகை-பாம்பன் இடையே கரையை கடக்க உள்ளது. இதனால் இந்த இரு இடங்களுக்கு இடைப்பட்ட ஊர்களில் புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசின் சார்பில் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் அதிரை பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பிலும் புயல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. பேரிடர் ஏற்பட்டால் அதற்கு தேவையான உபகரணங்களும், பேரூராட்சி பணியாளர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ் அவர்களும், அதிரை பேரூராட்சியின் துப்புரவு ஆய்வாளர் அன்பரசன் ஆகியோர் இன்று நமக்கு பேட்டி அளித்தனர். அதன் வீடியோ இதோ :