அதிரை பிலால் நகர் ஜமாத் சார்பில் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை தெரு சம்மந்தமான கோரிக்கை மனுவை அதிகாரிகளை சந்தித்து அளித்தனர்.
இதில் பிலால் நகரில் குப்பை அல்லாமல் இருப்பது, டெங்கு கொசு வராமல் தடுக்க கொசு மருந்து அடிக்க வலியுறுத்தல், தெருவிற்கு வாய்க்கால்,ரோடு விரைவாக போட வலியுறுத்தியும் மனு வாயிலாகவும், நேரடியாகவும் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் கொசு மருந்து அடிப்பதாகவும், குப்பைகளை அள்ளுவதாகவும் உறுதிபட கூறியுள்ளனர்.
மேலும் பிலால் நகர் தெருவிற்கு வாய்க்கால், ரோட்டிற்காக ரூ.48,00,000 ( நாற்பத்தி எட்டு லட்சம் ) ஏற்பளிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதத்திற்குள் ரோடு , வாய்க்கால் அமைத்து தரப்படும் என்று கூறியுள்ளனர்.