அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மின் கம்பமானது பேரூராட்சி பின் புறம் அமைந்திருந்தது. மின் கம்பமானது முறிந்து விழும் நிலையில் பல நாட்கள் நின்று கொண்டிருந்தது.
எதிர்பாராத விதமாக நேற்று காலை முழுவதுமாக முறிந்து கீழே விழுந்தது, பயணிகள் வாகன ஓட்டிகள் யாரும் இல்லாத காரணத்தினால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.இதனை கண்ட வாகன ஓட்டிகள் இன்று நண்பகல் டாக்சி ஓட்டுநர் சங்கம் சார்பாக பேரூரட்சியில் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் மெத்தன போக்கில் விட்டுவிட்டனர்.
மின் கம்பம் விழுந்த இடத்தில் வாகனம் நிறுத்தவும் பயணிகள் நிற்கவும் இடமில்லாமல் மின்கம்பமானது சாலையோரத்திலேயே கிடப்பது குறிப்பிடத்தக்கது.
எனவே பொதுமக்களின் நலன் கருதி அதிரை பேரூராட்சி அம்மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.