Thursday, April 18, 2024

பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் இரயில்வே துறை பொது மேலாளருக்கு கோரக்கை மனு…!

Share post:

Date:

- Advertisement -

பட்டுக்கோட்டை பகுதிகளுக்கு விரைவில் இரயில் வசதி வேண்டி விண்ணப்ப கடிதம் இன்று அனுப்பப்பட்டது.

அதில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளன. தை மாதம் பொங்கல் திருநாளில் காரைக்குடி-பட்டுக்கோட்டை-திருவாரூர் இரயில் சேவை துவங்கவேண்டும்.

மீண்டும் கம்பன் விரைவுஇரயில் வண்டியினை இயக்க வேண்டும், மயிலாடுதுறை-காரைக்குடி பாசஞ்சர் இரயிலை இயக்க வேண்டும்.

மன்னார்குடியிலிருந்து சென்னைக்கு செல்லும் மன்னை விரைவு ரயிலுக்கு காரைக்குடி, பட்டுக்கோட்டை வழியாக திருவாரூர் ரயில் நிலையத்தில் இணையும் வகையில் ஓர் இணைப்பு விரைவு இரயிலும் , மன்னார்குடியிலிருந்து திருப்பதி,பகட்கி-கோத்தி செல்லும் விரைவு இரயில்களுக்கு காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வழியாக இணைப்பு விரைவு இரயில்களை இயக்க வேண்டும்.

வட மாநிலங்களிலிருந்து ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம் வரை இந்த இரயில் பாதையில் இரயில்களை இயக்கவேண்டும்.

ஏழை, நடுத்தர மக்கள்,வயதான வர்கள், மகளிர்,பயன் படும் வகையில் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு பாசஞ்சர் இரயில் களைஇயக்க வேண்டும்.

இந்த இரயில் பாதைக்கு கிழக்கு கடற்கரை இரயில் பாதை என்று பெயர் சூட்ட வேண்டும்.

மேலும் இவ்வழிதடத்தில் நாகூர், வேளாங்கன்னி,திருவாரூர், வேதாரண்யம், கோடியக்கரை அலையாத்தி காடுகள், தில்லை விளாகம் இராமர் கோயில், முத்துப்பேட்டை தர்கா, பட்டுக்கோட்டைக்கு அருகில் மனோரா, ஆவுடையார் கோவில், ஏர்வாடி தர்கா, காரைக்குடி அருகில் பிள்ளையார் பட்டி, செட்டிநாடு அரண்மனை கள் உள்ளன.

இப்பகுதியில் இருந்து 70-80 பேருந்து கள் தினசரி சென்னை க்கு செல்கிறது. இரயில் சேவை துவங்கி னால் 70% -80% பயணிகள் இரயில் பயணத்தை மேற்கொள்வதாலும், உப்பு, கருவாடு, தென்னை, வேளாண்மை இடுபொருட்கள், ஜவுளி போன்ற சரக்கு போக்குவரத்தினாலும் இரயில்வே துறைக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

எனவே சென்னை, மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி, இராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, கேரள மாநிலப்பகுதிகளுக்கு இரயில் சேவையினை துவங்க வேண்டும் என பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நல சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...