Friday, March 29, 2024

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடக்கும் – ஐசிசி அறிவிப்பு !

Share post:

Date:

- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, இந்த ஆண்டு மே மாதம் 30-ம் தேதி தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்னும் இந்தப் போட்டிகள் தொடங்காத நிலையில், ‘2023-ம் ஆண்டில் நடக்க உள்ள 13-வது ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறும்’ என்று அடுத்த உலகக்கோப்பை நடைபெற உள்ள இடத்தை முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை நிர்வாக அதிகாரியுமான டேவிட் ரிச்சர்ட்சன் அறிவித்துள்ளார்.

அதுமட்டுமல்ல, “முதல்முறையாக நடைபெற உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரைத் தொடர்ந்து, 2020-ம் ஆண்டில் ஆண்கள், பெண்களுக்கான உலகக்கோப்பை டி20 போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. அதன்பின், 2021-ல் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நியூஸிலாந்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து, இந்தியாவில் 2021-ம் ஆண்டில் டி20 உலகக்கோப்பைப் போட்டியும், 2023-ல் ஆண்கள் உலகக்கோப்பைப் போட்டியும் நடைபெற உள்ளது”என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஆண்டு உலகக்கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புள்ள அணிகளைப் பற்றி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ரிச்சர்ட்சன், “தற்போது இந்தியா சிறப்பாக விளையாடிவருகிறது. இங்கிலாந்தும் சிறந்த ஒருநாள் அணியைக் கொண்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், இந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லை. நானும் உங்களைப்போல இந்தத் தொடரை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...