அதிரையின் மேம்பாடு குறித்து ஆலோசிக்க வெளிநாடுவாழ் அதிரையர்கள் பங்கேற்கும் வகையில் இணையவழி கலந்துரையாடலுக்கு நகர SDPI கட்சி ஏற்பாடு செய்திருந்தது. அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் வகையில் நடந்த இந்த கலந்துரையாடலில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட 12 நாடுகளில் வாழும் அதிரையர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியாவிலிருந்தும் சிலர் கலந்துக்கொண்டு தங்கள் கேள்விகளை முன்வைத்தார்கள். இந்த கலந்துரையாடலை அதிரை எக்ஸ்பிரஸ் நேரலை செய்தது. இதில் பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு SDPI சார்பில் வழக்கறிஞர் முகம்மது தம்பி பதிலளித்தார். குறிப்பாக SDPI-ன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் அம்சங்கள் குறித்து வெளிநாடுவாழ் அதிரையர்கள் கலந்துரையாடினர். அந்த வீடியோவை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து காணலாம்.
அதன் வீடியோவை கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து காணலாம்.