மரண அறிவிப்பு : நடுத்தெரு ஆம்லக்கா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் நெ.அ. முஹம்மது இபுராஹீம் அவர்களின் மனைவியும் , மர்ஹூம் எ. செய்யது முஹம்மது புஹாரி அவர்களின் சகோதரியும் , மர்ஹூம் மு.இ. ஹபீப் ரஹ்மத்துல்லாஹ் , மு.இ. ஹிதாயத்துல்லாஹ் , மு.இ. சேக் மதினா ஆகியோரின் தாயாரும் , எம். செய்யது அபூசாலிகு , மர்ஹூம் சி.ந. அப்துல் கரீம் , மர்ஹூம் ந.அ. முகைதீன் அப்துல் காதர் , நெ.அ. தமீம் அன்சாரி ஆகியோரின் மாமியாருமாகிய ஆமினா அம்மாள் அவர்கள் மரைக்கா குளம் மேட்டில் மப்ரூர் பள்ளி அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 8.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.