அதிரை அருகே மழவேனீற்க்காடு ஊராட்சி நடுவிக்காடு கிராமத்தில்
ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளியில்
மாணவ மாணவியர்களுக்கு குடிநீர் இல்லா அவலம்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விழாவில் நடுவிக்காடு கிராமா சபை கூட்டத்தில் ஐந்து கோரிக்கைகள் கிராம மக்களால் முன்வைக்கப்பட்டது..
நடுவிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கள்ளியில் 72 மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர் அங்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
மாணவ மாணவியர்களுக்கு குடிநீர் வழங்க கோரி
கோரிக்கை விடுத்தோம்
இதுவரை குடிநீர் தேக்கதொட்டி பழுது பார்த்து மாணவ மாணவியர்களுக்கு குடிநீர் விநியோகம் சரி செய்து தரப்படவில்லை. குடிநீர் தேக்கத்தொட்டி குடிநிர் சுத்தம் அசுத்தமான நிலையில் உள்ளன.
பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மதிய சத்துணவு சமைக்க தண்ணீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. அருகாமையில் உள்ள வீடுகளில் தண்ணீரை பெற்று மதிய உணவை சமைத்து மாணவ மாணவிகளுக்கு மதிய சத்துணவை வழங்குகின்றன.
இதுவரை கண்டுகொள்ளாத அரசின் அலட்சியம் பல முறை பல புகார் மனுக்களை கொடுத்தும் கண்டு கொள்ளாத அரசு அதிகாரிள்
சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் விரைவில் பள்ளி மாணவ மாணவியர்களின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பார்களா என நடுவிக்காடு கிராமா வாசிகளின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.