தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெரியதெரு அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் சாலையோரத்தில் இருந்தது.
நேற்று (13/09/2018) வியாழக்கிழமை காலை அடையாளம் தெரியாத நபர் பட்டுக்கோட்டை பெரிய தெரு அருகே இறந்து விட்டார். இவரது உடலானது காலை முதல் மாலை 03.30 மணி வரை இறந்த இடத்திலேயே இருந்துள்ளது.
அதன் பிறகு மாலை 3.45 மணியளவில் தகவலறிந்து கலாம் இயக்கம் நிர்வாகிகள், பட்டுக்கோட்டை காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர்.
பிறகு அவரின் உடலை மீட்டனர் அப்பொழுது அவரது சட்டையில் தொலைபேசி இருந்தது. அதிலிருந்து இறந்தவரின் மனைவிக்கு தகவல் தெரிவித்தனர்.
இறந்தவரின் ஊர் செட்டியகாடு (திருத்துறைப்பூண்டி) தகவலறிந்து அவரது மனைவி நம்ப மறுத்தார். அதன் பிறகு வாட்ஸாப் மூலம் புகைப்படம் அனுப்பிவைக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது.
பிறகு இறந்தவரின் உடலை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
தகவலறிந்து விரைந்து சென்று உதவி செய்த ரகு, சசி, ஸ்ரீ ராம் அவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.