Saturday, April 20, 2024

முழு அடைப்பிற்கு மத்தியிலும் உயர்ந்த பெட்ரோல்,டீசல் விலை : பொதுமக்கள் அதிர்ச்சி!

Share post:

Date:

- Advertisement -

இந்தியா முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடக்கும் நிலையிலும் பெட்ரோல் , டீசல் விலையில் இன்றும் உயர்வு ஏற்பட்டுள்ளது.

விலை உயர்ந்தது.. இதுமட்டும்தான் பெட்ரோல் , டீசல் விலையில்கடந்த சில மாதங்களாக நடந்து கொண்டே உள்ளது. ஒரு பைசா கூட கடந்த சில நாட்களில் பெட்ரோல் டீசல் விலையில் குறையவில்லை.

ஒரு பக்கம் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு குறைந்து கொண்டே செல்கிறது. இன்னொரு பக்கம் பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. தினமும் பைசா கணக்கில் பெட்ரோல் , டீசல் விலை மொத்தமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது.

பெட்ரோல் , டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளலாம், என்று பிரதமர் மோடி கூறிய பின்னர் தினமும் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த மாதம் பெட்ரோல் டீசல் விலை 80 ரூபாயை எட்டியது. இன்று மீண்டும் பெட்ரோல் , டீசல் விலை உயர்ந்தது. தொடர்ந்து உயர்ந்துவருவதை பார்த்தால் இன்னும் சில தினங்களில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.100 ஐ தொடவும் வாய்ப்புள்ளது.

இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்தது. டீசல் விலை 23 காசுகள் அதிகரித்துள்ளது. தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.91ஆகும். டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.98 ஆகும்.

இந்நிலையில் பெட்ரோல் , டீசல் விலை உயர்விற்கு எதிராக இன்று நாடு முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் இன்று பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து இருக்கிறது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...