Friday, April 19, 2024

மத்திய அரசை கண்டித்து நாடு முழுதும் நாளை பந்த் !!

Share post:

Date:

- Advertisement -

பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக நாளை நடக்கும் போராட்டம் காரணமாக தமிழகத்தில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும். இதற்கு அதிமுக, பாஜக தவிர்த்து பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது. இதனால் மக்கள் கடும் கஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இந்த நிலையில் இதற்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் இந்தியா முழுக்க முழு அடைப்பு போரட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்கு மக்களும் ஆதரவு தெரிவிக்கும் நிலையில் இருக்கிறார்கள்.

தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.86காசுகளாகும். டீசல் விலை 56 காசுகள் அதிகரித்துள்ளது. தற்போதைய டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.88காசுகளாகும். மும்பையில் பெட்ரோல் விலை 88.50 ரூபாய்க்கு விற்கிறது.

காங்கிரஸ் அழைப்பு விடுத்திருக்கும் போராட்டத்திற்கு தி.மு.க., ம.தி.மு.க., இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ, விடுதலை சிறுத்தை, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தி.க, பெருந்தலைவர் மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக், எஸ்.டி.டி.பி.ஐ. ஆகிய கட்சிகள் ஆதரவு தருகிறது. பாமக வெளியில் இருந்து ஆதரிக்கிறது.

இதனால் தமிழ்நாட்டில் நாளை அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கும். வணிகர் அமைப்புகள் அனைத்தும் கடைகளை அடைப்பதாக கூறியுள்ளது. அதே சமயத்தில் தொழிலாளர்கள் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...