தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு,பட்டுக்கோட்டை போன்ற கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடாததை கண்டித்து பட்டுக்கோட்டையில் அனைத்துகட்சி,விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள் என அனைத்து அமைப்புகளும் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் அதிரையை சார்ந்தவர்களும் கலந்துகொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இப்போராட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கெடுத்தனர்.