அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளி வாகனம் மதுக்கூர் அருகே மாணவர்களை ஏற்றி சென்றுள்ளது அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மதுக்கூர் மின்வாரிய ஊழியர் சேகர் (வயது38) மீது பள்ளி வாகனம் பலமாக மோதியது இதில் சேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்த பொதுமக்கள் வாகன ஓட்டுனரை சிறைபிடித்து வைத்ததாகவும், அவ்வோட்டுனர் மது போதையில் இருந்ததாக கூறி காவல் துறைக்கு தகவல் கொடுத்தும் உரிய நடவடிக்கைகள் இல்லாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இரண்டுமணி நேரமாக உயிர் இழந்த சேகரின் உடலை மருத்துவமனைக்கு எடுத்து செல்ல அனுமதிக்காமல் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர் தற்பொழுது காவல் துரையின் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டு. அதிரை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் உடல் மீட்கப்பட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது…