Thursday, April 18, 2024

ஜார்கண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடையை உயர்நீதிமன்றம் ரத்துச் செய்தது!

Share post:

Date:

- Advertisement -

ராஞ்சி:ஜார்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தடைச் செய்த அம்மாநில அரசின் உத்தரவை ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது.1908ல் கிரிமினல் சட்ட திருத்தம் 16-வது பிரிவின் படி ஜார்கண்டில் ஆளும் பா.ஜ.க அரசு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தடைச் செய்து உத்தவிட்டது.இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம் அந்த தடையை ரத்துச் செய்து உத்தரவிட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் மீது பதிவுச் செய்த முதல் தகவல் அறிக்கையையும்(எஃப்.ஐ.ஆர்) உயர்நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது.

மேற்குறிப்பிட்ட சட்டத்தின்படி ஒரு இயக்கத்தை தடைச் செய்வதற்கான நடைமுறைகள் எதனையும் மாநில அரசு கடைப்பிடிக்கவில்லை என்றும் இவ்விவகாரத்தில் இயல்பான நீதியின் தத்துவங்களும், அரசி சாசனத்தின் 19-வது பிரிவும் மீறப்பட்டுள்ளதாகவும் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

தடையை நியாயப்படுத்தும் எந்தவொரு ஆவணத்தையும் ஆஜர்படுத்த மாநில அரசால் இயலவில்லை என்றும் உயர்நீதிமன்றம் கூறியது.

தடை உத்தரவு என்பது அநீதியானது.அதனால் தடை உத்தரவை ரத்துச் செய்வதாக உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

ஜார்கண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தடைச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தேஜஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...