தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் ஈ.சி.ஆர் சாலையில் பேரிகாட் வைக்கப்பட்டது.
மல்லிப்பட்டினம் அருகே அதிகமான வாகன விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.மேலும் ஈசிஆர் சாலையில் வருகின்ற வாகனங்கள் அதிவேகமாக செல்வதாலும் விபத்துகள் தொடர்ந்த வண்ணமே இருந்தது. இதனையடுத்து மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்றம் சார்பாக மல்லிப்பட்டினம் ஈ.சி.ஆர் சாலையில் புதுமனைத்தெரு நுழைவு வாயில் அருகே வாகன வேக தடுப்புகளை வைத்தனர்.
இந்நிகழ்வில் சமுதாய நலமன்றத்தின் நிறுவனர் கனடா ரஃபி,மன்ற நிர்வாகிகள் ஹசன் மைதீன்,பிச்சை,உமர்,சைபுல்லா,ரஹ்மத்தில்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே மல்லிப்பட்டினம் மெயின் ரோட்டிலும், பள்ளி மாணவிகள் கடந்து செல்லும் பகுதி அருகேவும் பேரிகாட் அமைத்துள்ளனர்.