Friday, April 19, 2024

தொடர் மழை, வெள்ளம்… தமிழகத்தில் இரண்டு மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை !

Share post:

Date:

- Advertisement -

தற்போது தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று வருகிறது. வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஏற்பட்டுள்ளது.

இது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களிலும் , மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

கன்னியாகுமரியில் நேற்று இரவில் இருந்து மழை பெய்து வருகிறது. அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் தீவுகள் போல மாறி வருகின்றன. இதனால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து அங்கு மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரியில் கனமழை காரணமாக பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நீலகிரி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் அம்மாவட்ட கலெக்டர் திவ்யா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...