அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பாக வள்ளிக்கொல்லைக்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்
இன்று சுதந்திர தின கொடியேற்றப்பட்டது.
இதில் தலைமை ஆசிரியை வரவேற்புரை ஆற்றினார்.
லயன்ஸ் சங்க தலைவர் பேரா. முகம்மது அப்துல்’ காதர் அவர்கள் கொடியேற்றினார் .
சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள் பற்றி பேரா. செய்யது அகமது கபீர் அவர்கள் சுதந்திர போராட்ட களத்தில் நடந்த பல மறைக்கப்பட்ட தகவல்களை தந்து சிறப்புரையை சிறப்பாக செய்தார்
இதில் முன்னாள் தலைவர் ஹாஜி முகம்மது முகைதீன் செயலர்’ சூப்பர் அப்துல் ரஹ்மான் பொருளர் அப்துல் ஜலீல் இயக்குனர்கள் ஆறுமுகசாமி செல்வராஜ் உறுப்பினர்கள் முத்துசாமி முல்லை மதி
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வடுகநாதன் நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் இரவி மற்றும் பெற்றொர்கள் கலந்து கொண்டனர் .
பள்ளி மாணவ மாணவியருக்கு இனிப்பு மற்றும் எழுதுகோள்கள் வழங்கப்பட்டது.
லயன் முத்துசாமி அவர்கள் பள்ளி அலுவலகத்திற்கு ரூபாய் ஐயாயிரம் மதிப்பிலான பீரோவை பள்ளி தலைமை ஆசிரியையிடம் வழங்கினார்.
பெ. ஆ.கழக தலைவர் வடுகநாதன் அவர்கள் நன்றி கூறினார்.