தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கடந்த 12 ஆண்டுகள் தன்னார்வலராக இரத்த தானம் செய்துவரும் அதிரையை சார்ந்த ஏ. சாகுல் ஹமீது அவர்களுக்கு அதிரை அரசு மருத்துவமனையில் வைத்து அய்டா சார்பாக முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகளுடன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதனோடு, டாக்டர் ஏ.அன்பழகன்
(அதிரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர்) மற்றும்
எஸ்.கார்த்திகேயன்
(காது, மூக்கு மற்றும் தொண்டை சிறப்பு மருத்துவர்) பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.
இங்ஙனம்,
அய்டா நிர்வாகக்குழு
ஜித்தா, சவுதி அரேபியா