தஞ்சாவூர் மாவட்டம்,பேராவூரணியை அடுத்த குருவிக்கரம்பை உள்ளிட கடைமடைப் பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை.தண்ணீர் விடக்கோரி விவசாயிகள் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணகி வைரவன் தலைமையில் நடைபெற்ற மறியலில் சேதுபாவாசத்திரம் திமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் மு.கி.முத்துமாணிக்கம்,மதிமுக ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
காலை 9 மணியளவில் தொடங்கிய சாலைமறியல் 3 மணிநேரம் நீடித்தது.பேராவூரணி வட்டாட்சியர் பாஸ்கரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தடையின்றி தண்ணீர் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.