திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, குவைத், ஷார்ஜா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும், உள்நாட்டு சேவையாக சென்னை, பெங்களூருவுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர.
திருச்சி விமான நிலையத்தில் 23 மணிநேரமாக நடைபெற்ற வரும் சிபிஐன் தொடர் விசாரணையில் மூன்று சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி கைது.
திருச்சி விமான நிலையத்தில் அரசு அதிகாரிகள் ,தனியார் நிறுவன ஊழியர்கள் பயணிகள் என அனைவரையும் அதிரடி சோதனையில் சிபிஐ எஸ்.பி தலைமையில் 20 கொண்ட குழுவினர் அதிரடி சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் தங்கம்,கடல் ஆமைகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு, சுங்கதுறை அதிகாரிகள் உதவி ஆய்வாளர் மற்றும் இரு கண்காணிப்பாளருக்கு தொடர்பு இருப்பதால் மூன்று அதிகாரிகள் உட்பட எட்டுபேரை கைது செய்து சிபிஐ வழக்குபதிவு செய்துள்ளது.