Tuesday, April 23, 2024

நாகூர், பட்டுக்கோட்டை அணிகள்  வெற்றி!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் நடத்தும் 15 ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது.

இன்றைய தினம் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றது. முதலாவது ஆட்டமாக காரைக்கால் – நாகூர் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் நாகூர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அடுத்து நடந்த இரண்டாவது ஆட்டத்தில் அதிரை AFFA – பட்டுக்கோட்டை அணிகள் களம் கண்டன.

உள்ளூர் ரசிகர்களின் பலத்த கர ஒலிகளுக்கு மத்தியில் களமிறங்கிய நடப்பு சாம்பியனான அதிரை AFFA அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்புடன் களமிறஙகியது.

முதல் பகுதி நேரம் வரை இரு அணியினரும் கோல் ஏதும் போடாமல் சமநிலையில் ஆடி முடித்தனர்.

இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் விவேகானந்தா பட்டுக்கோட்டை அணி யாரும் எதிர்பாராத வகையில் முதல் கோலை அடித்தது.

தொடர்ந்து ஆடிய அதிரை AFFA அணி 0-1 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வியுற்றது அதிரை ரசிகர்களிடையே ஏமாற்றத்தையும் வருத்ததையும் அளிக்கிறது.

நாளைய தினம் நாகூர் – பட்டுக்கோட்டை அணிகள் காலிறுதி போட்டியில் சந்திக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...