அதிரை எக்ஸ்பிரஸ்:- துருக்கி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற எர்துகான் மீண்டும் அப்பதவியை கைபற்றியுள்ளார். பதவிக்காலம் அடுத்தாண்டு வரை இருக்கும் நிலையில், முன்னதாகவே அதிபர் தேர்தலை எர்துகான் நடத்தினார்.
இதில் எர்டோகன் கட்சி 53 சதவீதத்திற்கும் மேல் ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து மீண்டும் துருக்கி அதிபராக எர்துகான் தேர்வாகிறார்.