Friday, April 19, 2024

அதிரையில் தரமான ஆங்கில வழிக்கல்வியை அறிமுகம் செய்தது ஓர் அரசுப்பள்ளி !!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிராம்பட்டினம் நடுதெரு ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப்பள்ளி கடந்த 5ஆண்டுகளாக துவக்கப்பள்ளி அந்தஸ்த்திலிருந்து நடுநிலை பள்ளியாக தரமுயற்த்தப்பட்டன.

இதில் 5ஆம் வகுப்பு வரையில் பயின்ற மாணாக்கர்கள் 6ஆம் வகுப்பிற்கு மற்ற பள்ளிகூடத்தை நாடும் நிலையை மாற்ற எண்ணிய பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் நடுநிலை பள்ளியாக (8ஆம் வகுப்புவரை) மாற்ற கடும் பாடுபட்டு அதில் வெற்றியும் கண்டனர்.

இந்நிலையில் தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவில் மாணவ, மாணவியர்களை உருவாக்கம் செய்ய வேண்டும் என்ற லட்சிய வேட்கையுடன் ஆங்கில வழி கல்வியை அறிமுகம் செய்துள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி!

கரன்சி கறக்கும் தனியார் பள்ளிகளை விட தரமான கல்வி, சுகாதாரம், சத்துணவு, முழுக்க முழுக்க பெண் ஆசிரியர்களை கொண்ட வகுப்பறைகள் இயற்கையான சூழலில் அமைந்த நடுதெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நமது பிள்ளைகளை சேர்த்து தரமான கல்வியை இலவசமாக பெற்றிடுவோம்.

விரைவில் இப்பள்ளியில் பயின்று அயல் நாடுகளில் உள்ள முன்னாள் மாணவர்கள் அலுமினி அசோசியேசன் துவங்கப்பட உள்ளது.

இதன்வாயிலாக ஏழை மாணாக்கர்களுக்கு பல்வேறு பட்ட நல உதவிகள் கிடைக்க வாய்ப்புகளும் உள்ளன.

எனவே பெற்றோர்கள் இப்பள்ளியில் தயக்கமின்றி பிள்ளைகளை சேர்த்து அவர்களின் எதிர்கால நலனில் பங்கெடுத்து கொள்ளுங்கள் !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...