முத்துப்பேட்டையை சேர்ந்த குணசேகரன் பெட்டிக்கடை நடத்திவந்தார். இவருக்கு அமுதா என்ற மனைவியும், ஒரு மகள், இரண்டு மகன்கள் உண்டு. இந்நிலையில் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த குணசேகரனின் காலினை வெட்டி எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் ஏற்கனவே வறுமையால் வாடிவரும் அவர் மன உளைச்சல் காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மற்றும் மகள் வித்தியா ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வறுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் முத்துப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.