தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை அருகில் உள்ள சுடுகாட்டில் இன்று அதிகாலை 5.00 மணியளவில் தேங்காய் பஞ்சுகளில் திடீரென தீ பற்றியுள்ளது. சிறிது நேரத்தில் தீ பரவி வருகிறது. இதற்கு அருகில் அதிகமான குடிசை வீடுகள் இருக்கின்றன. இதனை அறிந்த நமதூர் இளைஞர்கள் தீ அணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தகவலறிந்த தீ அணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர்.