Thursday, March 28, 2024

கோவையில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் அளவிலான கள்ள நோட்டுகள் பறிமுதல்!!

Share post:

Date:

- Advertisement -

கோவையில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் அளவிலான கள்ள நோட்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கோவை சாய்பாபா காலனியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது அந்த வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த ஆனந்த என்பவர் தனது கைபையை காவல் துறையினரிடம் இருந்து மறைக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவரது கைபையை சோதனை செய்த போது அதில் 2000 ரூபாய் தாள்கள் அதிகளவில் இருந்தனர். இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரனையில் பையில் இருந்தவை அனைத்தும் கள்ள நோட்டுக்கள் என தெரியவந்தது.

மேலும் காடாக சாலையில் வேளாண்டிபாளையத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் கள்ள நோட்டுக்களை அச்சடித்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற கோவை மத்திய பிரிவு காவல் துறையினர் 1 கோடியே 20 லட்சம் அளவிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். கைப்பற்றவை அனைத்தும் 2000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் ஆகும். மேலும் கள்ள நோட்டு அச்சடிக்க பயண்படுத்திய கணினி, பிரிண்டர், கட்டிங் இயந்திரம் ஆகியவற்றையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆனந்த் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது கூட்டாளி 2 பேரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...